லக்ஷ்மி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் சௌந்தர்யா.! கதறி அழும் கண்ணம்மா..


லக்ஷ்மி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் சௌந்தர்யா.! கதறி அழும் கண்ணம்மா..


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  அறிமுகமான காலகட்டத்தில் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வந்த சீரியல் சில காலங்களாக ரசிகர்கள் அனைவரும் சீக்கிரம் இந்த சீரியலை முடியுங்கள் என்று கூறி வந்த நிலையில் தற்போது மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் வகையில்  சீரியலை உருவாக்கி வருகிறார்கள்.

வெண்பா செய்த சதி திட்டத்தால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தற்பொழுது ஷர்மிளா என்ற கேரக்டர் வெண்பாவின் அம்மாவாக அறிமுகமாகி இருப்பதால் வெண்பாவை அடக்கும் வகையில் அவரின் அம்மா செயல்பட்டு வருகிறார்.

பாரதியை மறந்துவிடு உனக்கு நல்ல மாப்பிள்ளையாக திருமணம் செய்து வைத்து விடுகிறேன் என்று கூறி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒரே ஹாஸ்பிடலில் பணியாற்றுவதால் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்கின்றனர்.

மேலும் இதய அறுவை சிகிச்சை செய்த குழந்தை நான் உங்களையும் கண்ணம்மாவும் மறக்க மாட்டேன் நீங்கள் தான் அம்மா அப்பா என்று கூறி பாரதியையும்,கண்ணம்மாவயும் அம்மா அப்பா என்று அழைக்கிறாள்.  இப்படிப்பட்ட நிலையில் தனது அப்பா யார் என்பதை தெரிந்து கொண்ட லட்சுமி தனது அம்மாவிடம் அதனைப் பற்றி கேட்கிறாள்.

இதனைத் தொடர்ந்து சௌந்தர்யா வீட்டிற்கு வர நீங்கள் ஏன் என் அப்பாவைப் பற்றிய கூறவில்லை.  எனக்கு பெரிய வீடு, கார் போன்றவை எல்லாம் தேவையில்லை எனக்கு என் அப்பா தான் வேண்டும் என்று கூறுகிறாள்  சௌந்தர்யா பதில் சொல்லாத அளவிற்கு பேசுகிறார்  அந்த ப்ரோமோ தான் தற்போது வெளியாகிவுள்ளது.

Comments

Popular posts from this blog

Pumpkin Pancakes Recipe

Pineapple Cranberry Almond Cheese Ball